அந்த விஷயத்தால பல நைட் தூங்காம இருந்தேன்.. லைவ் சாட்டில் உண்மையை உடைத்த சமந்தா
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து காதலித்து 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் லைவ்வாக அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அப்பொழுது ரசிகர் ஒருவர், இணையத்தில் வரும் மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? எனக் கேட்டுள்ளார்.
அதற்கு, பதிலளித்த சமந்தா முன்பெல்லாம் அதைப் பார்க்கும்போது தூக்கமே வராது. பலநாள் இரவு முழுவதும் அதையே யோசித்து வருத்தப்படுவேன். ஆனால், இப்பொழுதெல்லாம் அதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது எனக் கூறியுள்ளார்

Comments
Post a Comment